குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை மதுவுக்கு அடிமையாகி எல்லாராலும் கைவிடப்பட்ட சகோதரி. ரோசல்லா கிரிபித், எப்படி சகோதரன் பிரன்ஹாம் அவர்களின் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டு, அதிலிருந்து விடுதலையானாள் என்பதைக் குறித்த சாட்சி (இந்த சாட்சி சகோதரி ரோசல்லா கிரிபித் அவர்களால் கொடுக்கப்பட்டது) இல்லினாயிஸை சேர்ந்த செல்வி. ரோசல்லா கிரிபித் அவர்களின் சாட்சி: நான் இங்கே எனது சாட்சியைக் கூற விரும்புகிறேன், "நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்" என்று இயேசு கூறினார், நாம் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும் நமது சாட்சியின் வசனத்தினாலும் ஜெயம் கொள்கிறோம். நான் என்னுடைய பழைய நிலைமையில் இருந்திருந்தால், என்னால் இவ்விதமான ஒரு சாட்சியைக் கொடுத்திருக்கவே முடியாது, எனக்குள் நான் இல்லை, கிறிஸ்து இயேசுவுக்குள் தான் நான் இருக்கிறேன். என்னுடைய சிறு பிராயத்தில், என்னை சந்தோஷப் படுத்தும் ஏதோவொன்றை நான் எதிர்நோக்கிக் கொண்டே யிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் எதையோ தேடிக்கொண்டேயிருந்தேன், ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு சமாதானமும் சந்தோஷமும் கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அக்கம் பக்கத்திலுள்ள மற்ற பிள்ளைகளுடன் விளையாட வேண்டி யிருந்தது, அதற்கு நான் தகுதியுள்ளவள் போன்று தோன்ற வில்லை. தெற்கு இல்லினாயிஸிலுள்ள எங்களுடைய சிறு பட்டணத்தில் இருந்த மெதோடிஸ்டு சபைக்கு ஒரு சிறு பிள்ளையாக அனுப்பப்பட்டேன். எனக்கு ஆறு வயதாக இருந்த போது, என்னுடைய பாட்டியோடு ஒரு எழுப்புதல் கூட்டத்திற்குச் சென்றேன், அங்கு இயேசுவுக்கு என்னுடைய இருதயத்தைக் கொடுக்கும்படியாக மரத்தூள் கிடந்த பாதையில் இறங்கிச் சென்றேன், ஆனால் யாருமே எனக்கு உதவி செய்ய வில்லை. நான் இயேசுவுக்காக வாழாமல் போய் விடுவேனோ என்று பயந்தேன். சபையில் ஞாயிறு பள்ளிக்குச் சென்றேன், கோடைகாலத்தில் எங்களுடைய சபையிலிருந்த வாலிப வயதினருக்கான முகாமிலும் (Youth Camp) போய் கலந்து கொண்டேன், ஆனால் இவை எல்லாவற்றின் மத்தியிலும், இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக அறிந்திருக்கவில்லை... (இயேசுவைக் குறித்த கதைகளை நான் அறிந்தேன், ஆனால் உண்மையிலேயே அவரை அந்நேரத்தில் நான் அறிந்திருக்கவில்லை). அதன்பிறகு நாங்கள் வேறொரு பட்டணத்திற்கு இடம் பெயர்ந்தோம், உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நான் ஒரு அலுவலகத்தில் வேலைபார்க்கத் தொடங்கினேன், நான் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வாரத்திற்கு ஆறு ஏழு நாட்கள் வேலை செய்தேன். அப்போது பெண்கள் வெளியில் செல்வதுண்டு, நாங்களும் ஒன்றாக வெளியே போவோம். அநேக நேரங்களில் நாங்கள் சிகாகோவுக்குப் போவோம். அது ஒரு பொழுதுபோக்கு என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் நடனமாடினோம், அப்போது நாங்கள் கொஞ்சம் குடிப்போம் என்பதை சொல்ல வேண்டிய தில்லை. அவர்களும் குடித்தார்கள், ஆனால் விரும்பிய நேரத்தில் அவர்களால் அதை விட முடிந்தது, ஆனால் என்னால் அவ்வாறு குடிப்பதை விட முடியவில்லை, இன்னும் கூடுதல் மதுவை ஆர்டர் பண்ணிக் குடித்துக் கொண்டிருப்பேன். நான் ஒழுக்கக்கேடானவள் அல்ல, ஆனால் தேவனுடைய பார்வை யில் ஒரு பாவம் மற்ற பாவத்தைப் போலவே அவ்வளவு பெரிதாய் இருக்குமே. என்னுடைய சொந்த விருப்பத்தையும் தாண்டி ஏதோவொன்றைச் செய்ய நான் கட்டாயப்படுத்தப் பட்டேன். பிறகு 1949ம் வருஷத்தில் மிதமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட ஒரு குடிகாரியாக இருப்பதை அறிந்து கொண்டேன். அதை என்னால் ஒப்புக்கொள்ள கூட எனக்கு விருப்பமில்லை. நான் மட்டுமீறிய குடிகாரியாக ஆனதால், எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பது போல் தோன்றினது. எனது பெற்றோர்கள் எனக்கு உதவி செய்ய விரும்பினார்கள், ஆனால் என்னை எப்படி சமாளிப்பது என்று அவர்களுக்குத் தெரிய வில்லை, அவர்கள் இருவரும் குடிகாரர்கள் அல்ல. என்னுடைய இருதயத்தில், நான் அந்தக் குடியிலிருந்து விடுதலையடைய விரும்பினேன், அந்தக் குடியைப் பற்றிய எண்ணத்தையே என் மனதை விட்டு அகற்றிப்போட என்னால் கூடுமானவரை முயன்று பார்த்தேன், ஆனால் அந்தப் பழக்கத்திலிருந்து என்னால் விடுதலை அடையவே முடியவில்லை. முடிவில், குடிப்பழக்கத்தை மாற்றும் இடத்திற்கு (Alcoholics Anonymous) போக முயற்சிக்கலாம் என்று முடிவு செய்தேன். அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டேன். அங்கு போன, 9 மாதங்களாக குடிக்காமல் இருந்த போதிலும், நான் உண்மையில் அங்கு சந்தோஷமாக இருக்கவில்லை, இப்படியாக அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு போய்க் கொண்டிருந்தேன். நான் குடிக்காமலே தேவன் என்னை வைத்திருக்க வேண்டுமென்று, ஒவ்வொரு நாளும் என்னுடைய படுக்கைக்குக் கீழே ஜெபித்துக் கொண்டிருப்பேன், ஆனால் நான் சந்தோஷமாகவோ அல்லது விடுதலையடையவோ ல்லை. இந்த மது பழக்கத்தை மாற்றும் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, நான் மருத்துவ மனைகளில் உள்ளேயும் வெளியேயும் இருந்தேன், நான் உள்ளே வருவதை அவர்கள் பார்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு நான் அப்போது இருந்தேன். மட்டுமீறிய குடிக்கு ஆட்பட்டவர்களுக் கான ஒரு மருத்துவமனைக்கு நான் சென்றேன், அங்கே 5 நாட்களுக்கு முட்டும் 150 டாலர் செலவானது, என்னுடைய வீட்டார் செல்வம் படைத்த ஜனங்களல்ல. மருத்துவமனைக்கும் டாக்டர் பில் கட்டணங்களுக்குமான செலவு அதிகரித்துக் கொண்டே போனது. இந்நாட்களில், நான் மிகவும் பலவீனமா யிருந்தேன், என்னுடைய எடை குறைந்து விட்டது, மிகவும் பரிதாபத்திற்குரியவளாக இருந்தேன். ஐந்து மருத்துவர்கள் என்னை கைவிட்டு விட்டார்கள், ஆறு மாதங்களில் நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பேன் என்று ஒரு மருத்துவர் கூறினார். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் என்னைக் கைவிட்டு விட்டார்கள், ஊழியக்காரர்களுக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை. ஒரு ஊழியக்காரர் என்னிடம் வந்து, வேதவாக்கியங்களைக் குறித்து தர்க்கரீதியாக பேசினார். ஆனால் சீஷர்கள் செய்தது போன்று அந்தக் குடிவெறியின் ஆவியைப் பார்த்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விலகிப்போகும்படி கட்டளையிட வேண்டியது தான் எனக்கு அவசியமாயிருந்தது. எனக்காக ஜெபம் செய்வதை விட்டு விடலாம் என்று எனது தகப்பனார், எனது தாயாரிடம் கூறினார், நானோ மாறவேயில்லை, ஆனால் எனது தாயாரோ அதற்கு செவி கொடுக்கவில்லை, ஒருக்கால் நான் மாறாமல் இருக்கலாம் என்று அவர்கள் கூறினார்கள், ஆனால் தேவனால் என்னை மாற்ற முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஒரு மிருகத்தின் மென்மயிரினாலான ஒரு கோட்டை (fur coat) என்னுடைய தாயார் எனக்கு வாங்கிக் கொடுத்தார்கள், நான் கடுங்குளிரில் விழுந்து கிடக்கும் போது, உறைந்து போகாமல் இருப்பேனே என்பது அவர்களுடைய எண்ணம். நான் அந்த கோட்டிலிருந்த பாக்கெட்டுகளைக் கீறி, அதில் வரிசையாக மதுபாட்டில்களை வைத்திருந்தேன். என்னுடைய தாயார் எனக்காக நிற்கிறார்களே என்று நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். நான் இந்தக் குடிபழக்கத்திலிருந்து விடுதலை யடையவே மாட்டேன் என்று எல்லாரும் கூறின போது, அவர்களோ தேவனைப் பற்றிக்கொண்டார்கள். நான் அவர்களை அவமானப்படுத்தியிருந்த போதிலும், நான் ஏன் இப்படி செய்கிறேன் என்று அவர்களுக்குப் புரியாத போதிலும், அவர்கள் அப்பொழுதும் எனக்காக நின்றார்கள். நான் குடிக்கும்படி ஒரு கப் மதுவை உயர்த்தும் போது, என்னுடைய (கை) ஆடிக் கொண்டேயிருக்கும், எனவே நான் ஒரு சிறு நாய்க்குட்டியைப் போன்று அதைக் குடிக்க வேண்டியிருந்தது. எனக்கு மன அமைதி கிடைப்பதற்காக நான் கத்தோலிக்கத்துக்கு மாறினேன், எனக்கு அதில் விசுவாசம் இல்லை என்ற போதிலும் நான் அவ்வாறு செய்தேன். எனக்கு உதவி தேவை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், ஆனால் அவர்கள் என்னை கிறிஸ்துவிடம் வழிநடத்தவில்லை. பூமியில் என்னுடைய தாயாரைத் தவிர, மற்ற எல்லாருமே என்னை நம்பிக்கையற்ற நிலையில் விட்டு விட்டார்கள். எப்பொழுதும் இருந்ததை விட மிக மோசமாக இருந்த போது, நான் இரட்சிக்கப்படுவதாக என்னுடைய தாயார் ஒரு தரிசனம் கண்டார்கள். அவர்கள் தேவனை விசுவாசித்தார்கள். ஏனென்றால் தேவன் அவர்களுக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித் திருந்தார், ஐந்து பூமிக்குரிய மருத்துவர்களை நம்புவதைக் காட்டிலும் அவர்கள் தேவனையே நம்பினார்கள். அதற்குப் பிற்பாடு அந்தத் தரிசனம் நிறைவேறியது. நான் மிக மோசமான நிலையில், கடைசி கட்டத்தில் இருந்த போது, நான் எப்போது என்னுடைய மூச்சை விடுவேன் (மரித்துப் போவேன்) என்று பார்த்தவாறு ஒரு மருத்துவர் இரவு முழுவதும் என்னுடைய படுக்கையின் பக்கத்திலேயே காத்துக் கொண்டிருந்தார். அங்கே நின்று கொண்டிருந்த அந்த மருத்துவரைக் காட்டிலும் மேலான ஒரு மருத்துவர் அங்கே இருந்து, நான் மரிக்க மாட்டேன் என்றும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படியாக ஜீவிப்பேன் என்றும் அறிந்திருந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இயேசு, "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" என்றார். என்னுடைய ஜீவியத்தின் மிக இருண்ட அந்நேரத்தில், வெளிச்சம் பளிச்சிட்டது, இந்தியானாவிலுள்ள ஹேமண்ட்டில் நடக்கும் ஒரு கூட்டத்தைக் குறித்து சிலர் என்னிடம் கூறினார்கள், அங்கே தேவனுடைய தீர்க்கதரிசி, சங்கை வில்லியம் பிரன்ஹாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார் என்றும், முடமானவர்கள் நடக்கிறார்கள் என்றும், குருடர்கள் பார்வையடைகிறார்கள் என்றும், புற்று நோயாளிகள் சுகமடைகிறார்கள் என்றும், மேலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அற்புதங்கள் நடப்பிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள். இந்த ஜனங்கள் சுகமடைகிறார்கள் என்றால் நானும் நிச்சயமாக சுகமடைய முடியும் என்ற வார்த்தைகளை நான் பற்றிக்கொண்டேன். அந்தக் கூட்டத்தைக் குறித்து என்னிடம் கூறப்பட்ட பிறகு, மூன்றாவது நாள் நாங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போனோம். என்னுடைய தாயாரும், அவர்க ளுடைய சிநேகிதியும், நானும் கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போனோம். அது 1952ம் வருடம் ஜூலை மாதம் 11ம் தேதி. அங்கே ஜனங்கள் பாடி தேவனைத் துதிப்பதை நான் கண்டேன். அவர்கள் நிச்சயமாகவே சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நான் இன்னுமாகப் பார்த்துக் கொண்டே, எனக்கு உதவி கிடைக்குமானால், நானும் அவர்களுடன் சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். இயேசு கிறிஸ்துவை சேவிப்பதில் தான் உண்மையிலேயே சந்தோஷம் இருக்கிறது என்று நான் பின்னர் கண்டுகொண்டேன். அவர்கள் மிகவும் சந்தோஷமாய் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பிற்பகலில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்தோம், எனக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்தது. அந்தக் கூட்டத்தைக் குறித்து என்னால் நினைவுகூரக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று அவர்கள் வலியுறுத்தினது தான். சுகமடைவதற்கான ஒரு வேதவாக்கியமும் எனக்குத் தெரியாது, நான் நவநாகரீகமான ஒரு சபையில் வளர்க்கப்பட்டேன், தேவன் இந்த பிரபஞ்சத்தையும், இதனுடைய எல்லா அதிசயங்களையும் சிருஷ்டித்திருப்பாரானால், என்னுடைய சரீரத்தைச் சுகப்படுத்து வது அவருக்கு லேசான காரியம் தான் என்று மட்டும் நான் நினைத்துக்கொண்டேன். நான் என்னுடைய தலையைத் தாழ்த்தி, என்னைச் சுகப்படுத்துவது அவருக்கு சித்தம் தானா என்று தேவனிடம் கேட்டேன். நான் சொன்னது எல்லாம் அவ்வளவு தான். "அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்” என்று வேதாகமம் கூறுவது எனக்குத் தெரியாது. எனக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்தது. சகோதரன் பிரன்ஹாம் வந்து பிரசங்கம் பண்ணினார். பிரசங்க ஆராதனை முடிந்த பிறகு, சகோதரன் பிரன்ஹாம் ஜெ25 முதல் ஜெ50 வரையிலான ஜெப அட்டைகளை அழைத்தார், என்னுடைய ஜெப அட்டை வரிசையில் மூன்றாவதாக இருந்தது, அது ஜெ27, எனவே நான் இந்த தேவ மனிதருக்கு முன்பாக நிற்பேன் என்றால், நான் சுகமடைவேன் என்று அறிந்து கொண்டேன். நான் வரிசையில் வந்த போது, நான் இருளில் இருப்பதை தாம் கண்டதாக சகோதரன் பிரன்ஹாம் கூறினார். அவர், "தேவனுடைய தீர்க்கதரிசியை நீ விசுவாசிக்கி றாயா?” என்று கேட்க, நான், “ஆம்” என்றேன். சகோதரன் பிரன்ஹாம், "உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தி, இயேசு உன்னைச் சுகப்படுத்துவாரானால், உன்னுடைய மீதமுள்ள ஜீவியத்தில் இயேசுவைச் சேவிப்பாயா?” என்று கேட்டார், நான், "சரி" என்றேன். கூட்டத்தினர் தங்கள் தலையைத் தாழ்த்தும்படி சகோதரன் பிரன்ஹாம் அவர்களிடம் கூறி விட்டு, என்னுடைய தலையின் மேல் தம்முடைய கரத்தை வைத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என்னுடைய ஜீவியத்திலிருந்த குடிவெறியின் பிசாசை அதட்டினார். உடனே நான் விடுதலை அடைந்தவளாக மேடையை விட்டு வந்தேன். நான் என்னுடைய ஜீவியத்தில் முதல் முறையாக விடுதலை அடைந்திருப்பதை அறிந்து கொண்ட போது, நான் மிகவும் அற்புதமாக உணர்ந்தேன். 'குமாரன் விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்.' இயேசு கிறிஸ்து நொடிப்பொழுதில் என்னுடைய சரீரத்தைக் குணமாக்கினார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். நான் அந்த மேடையை விட்டுத் திரும்பி வந்த போது, எனக்காகவே ஒரு கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. என்னுடைய ஜீவியம் முழுவதும் எதற்காக ஏங்கினேனோ அது எனக்கு கிடைத்து விட்டது. என்னே, நான் எவ் வளவாக கிறிஸ்துவுக்குள் சந்தோஷ மாயிருக்கிறேன். ஒரு பெண்மணி என்னிடம் வந்து, அவர்கள் எனக்காக மிகவும் துக்கப்பட்டதாகக் கூறினார்கள், இயேசு என்னுடைய சரீரத்தைச் சுகமாக்கினதினால், அவர்கள் அவ்வாறு துக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன், நான் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தேன். நான் அவர்களுடைய மகளை அழைக்க முடியுமா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், அவளுக்கு என்ன பிரச்சனை என்று நான் அவர்களிடம் மூன்று முறை கேட்டேன். போதையூட்டும் மயக்க மருந்துக்கு (லாகிரி வஸ்துக்கு) அடிமைப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள், துப்பறியும் FBI கூட அவளைக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது, ஆனால் அவளோ இப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் ஃபிரட் அஸ்டெய்ரோடு நடனம் ஆடுபவள். அவளுக்கு உதவி தேவையாயிருந்தது. நல்லது, அவள் தன்னுடைய தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்து, தன்னை தொலைபேசியில் அழைக்கும்படி என்னிடம் கூறினாள். நான் அப்பொழுது தான் ஒரு நல்ல வேலையை இழந்திருந்தேன். அவளை அழைக்க வேண்டாமென்று ஜனங்கள் என்னிடம் கூறினார்கள். அதோடு கூட என்னுடைய தாயாரும் அவளை அழைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள், எனவே நான் மீண்டும் குழப்ப மடைந்தேன். நல்லது, நான் சுகமடைந்த பிறகு, அந்த இரவில் இந்தியானாவிலுள்ள, ஹேமண்டிலிருந்து வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தேன், நாங்கள் காபி அல்லது ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தினோம். அந்த ரவில் நான் தேவனிடம் வந்து, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேனா என்று எனக்குக் காட்டும்படி நான் அவரிடம் கேட்டேன், நான் சுகமடைந்திருந்ததை அறிந்திருந் தேன். நான் அவருக்கு முன்பாகச் செய்த ஒவ்வொரு பாவத்தை யும் அவர் எனக்கு மன்னிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், நான் அதற்காக வருந்தினேன். அதன்பிறகு நான் ஏறக்குறைய 10 நிமிடங்கள் காத்திருந்து விட்டு, என்னுடைய கரங்களை நீட்டியபடி எனது படுக்கையில் படுத்திருக்கும் போது, என்னுடைய ஆத்துமா எனது சரீரத்தை விட்டு நீங்கி, உட்கூரைக்கு எழும்பிச்சென்றது, நானோ பயந்து போனேன், நான் என்னுடைய அம்மாவை அழைத்தேன், நான் இரட்சிக்கப் பட்டு விட்டதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் மிகவும் சந்தோஷமாயிருந்தேன். நான் இரட்சிக்கப்பட்டு, சுகமடைந்த பிறகு, அடுத்த நாள் காலையில், நான் எழுந்து, ஆகாரம் புசித்து விட்டு, அந்தச் சிறு பெண்ணை அழைக்க எனக்கு மிகவும் உந்துதல் இருப்பதாக அம்மாவிடம் கூறினேன். நான் தொலைபேசியிடம் சென்று, அந்தச் சிறு பெண்ணிடம் 45 நிமிடங்கள் பேசினேன். கூட்டத்திற்கு வர முடியாது என்று அவள் அநேக சாக்குப்போக்குகளைக் கூறிக் கொண்டிருந்தாள், பிறகு நான் சுகமடைந்து விட்டதை எப்படி அறிந்து கொண்டேன் என்று அவள் என்னிடம் கேட்டாள். நாம் மற்ற எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்து விட்டோமே என்றும், எனவே நாம் கர்த்தராகிய இயேசுவை முயற்சித்துப் பார்க்க லாமே என்று அவளிடம் கூறினேன். நான் இரட்சிக்கப்பட்டு, சுகமடைந்த பிறகு, அடுத்த நாள் நான் கூட்டத்திற்குப் போய், அந்தப் பெண்ணை சந்தித்தேன் (அவளை என்னுடைய ஜீவியத்தில் கண்டது அதுதான் முதல் தடவை.) அவளுக்கு ஒரு ஜெப அட்டை கிடைத்திருந்தது, அவளுடைய எண் அழைக்கப் பட்டது. அந்த ஜெப வரிசைக்கு அவளோடு கூட நானும் போக முடியுமா என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டாள். நான் அவளோடு போனேன். அவள் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டாள். மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு, இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று அவளிடம் கூறினேன். ஒரு இரவுக்கு முன்பு தான் நான் இரட்சிக்கப்பட்டு சுகமடைந்திருந்தேன். அவள் ஜெப வரிசையில் கடைசியாக இருந்தாள், சகோதரன் பிரன்ஹாம் அவளுக்காக ஜெபித்தார். இயேசு அவளைச் சுகமாக்கினார், நாங்கள் இருவரும் எவ்வளவாக சந்தோஷமடைந்தோம், நாங்கள் இருவரும் ஒருவரையோருவர் பார்த்த போது, எங்கள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது, தேவனுடைய வல்லமை தான் எங்களை அந்தக் கட்டிலிருந்து விடுதலை ஆக்கியிருந்தது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். இயேசுவைச் சேவிப்பது என்பது எவ்வளவு அற்புதமானது! கர்த்தர் அற்புதமானவர்! ஜெபத்திற்குப் பிறகு இயேசு எனக்கு நல்லதொரு வேலையைக் கொடுத்தார், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நான் இரட்சிப்பையும் சுகத்தையும் பெற்று ஒரு வாரம் கழித்து, நான் கூட்டத்திற்குப் போனேன். (அதற்குப் பிறகு, அந்தக் கூட்டம் முடியும் வரையில், நான் ஒவ்வொரு நாளும் அங்கு சென்றேன்.) குடிக்கு அடிமையான ஒரு மனிதர் எங்களோடு வந்திருந்தார், என்னுடைய தகப்பனாரும் தாயாரும் கூட வந்திருந்தார்கள். சகோதரன் பிரன்ஹாம் பிரசங்கத்தை முடித்த பிறகு, ஜெப அட்டைகளை அழைத்தார். என்னுடைய தகப்பனாருக்கு ஜெப அட்டை R60 கிடைத்திருந்தது. அந்த ஜெப அட்டை அழைக்கப்படுவதற்கு பெரிய எண்ணாக இருந்தது, எனவே நான் என்னுடைய தலையைத் தாழ்த்தி ஜெபித்தேன். என்னை விடுதலையாக்கினது போன்று, குடிக்கு அடிமையான அம்மனிதனையும் தேவன் விடுதலையாக்க வேண்டும் என்று அவரிடம் ஜெபித்தேன். அதோடு கூட என்னுடைய தகப்பனா ரையும் சுகப்படுத்தி, அவரை இரட்சிக்க வேண்டுமென்று ஜெபித்தேன். உடனே சகோதரன் பிரன்ஹாம் மறுபக்கம் திரும்பிப்பார்த்து, ஐயா, உம்மைப்போல அதே காரியத்தை உடையவளாய் இருந்து, ஒரு வாரத்திற்கு முன்பு சுகமடைந்த அந்தச் சிறு பெண் மேலே பால்கனியில் இருக்கிறாள். அவள் உமக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், அதோடு கூட அவள் வேறு ஒருவருக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அதுதான் அவளுடைய தகப்பனார். அவரை எழுந்து நிற்கப் பண்ணி, உம்முடைய கரத்தை அவருடைய தலையின் மேல் வையும். அவர் தம்முடைய சுகத்தையும் இரட்சிப்பையும் ஏற்றுக்கொள்வாரா?” என்றார். இப்படியாக அநேக கூட்டங்களுக்கு நான் போகக் கிடைத்ததை சிலாக்கியமாக உணர்ந்தேன். தேவன் என்னுடைய ஜீவியத்தில் சந்தோஷத்தைக் கட்டளையிட்டார். என்னுடைய தகப்பனார் தாயாரோடும், என்னோடும் கூட ஞாயிறு பள்ளி சித்தமாகி, தம்முடைய தீர்க்கதரிசியாகிய, சங்கை வில்லியம் பிரன்ஹாம் அவர்களிடம் என்னை அனுப்பினார். உண்மை யிலேயே நான் சகோதரன் பிரன்ஹாமிடம் மிகப்பெரிய கிறிஸ்தவ மரியாதையையும் அன்பையும் வைத்திருக்கிறேன். இயேசு என்னைக் கண்டு, என்னைப் புரிந்து கொண்டு, நான் விடுதலையடைய விரும்புவதை அறிந்து கொண்டார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக. இதைக் குறித்து சகோதரன் பிரன்ஹாம் தாம் பேசிய "அவர் உங்களை விசாரிக்கிறவர்" என்ற செய்தியில் பின்வருமாறு கூறுகிறார்: 107. பாருங்கள், அதுதான் அவரை எனக்கு மகத்தானவராக ஆக்குகிறது. அவர் ஒரு திணித்து வைக்கப்பட்ட சட்டையாக இருக்கவில்லை. அவர் ஜனங்களுக்கு தேவனுடைய கிருபையாக இருந்தார். அவர் மனித மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய அன்பாக இருந்தார். எவ்வளவு சிறியதாகவோ அல்லது முக்கிய மற்றதாகவோ இருந்தாலும் காரியமில்லை, அவர் விசாரித்தார்; ஒழுக்கம் கெட்ட தன்மை, குடிப்பழக்கம் உள்ளவர்கள், குடிக்கு அடிமையானவர்கள், அது என்னவாக இருந்தாலும். 108. நான் சிகாகோவிலுள்ள ரோஸல்லா கிரிஃபித்தைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் (அவளுடைய புத்தகமானது இப்பொழுது வெளிவந்துள்ளது), மகத்தான ஆல்கஹாலிக் அனானிமஸ் சங்கத்தாரும் (Alcoholics Anonymous) அவளைக் கைவிட்டிருந்தனர். (இந்த சங்கத்தார் மருந்துகளின் மூலமாக ஜனங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டுமென்று அப்படிப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் கிளை சென்னையிலும் கூட உள்ளது மொழிபெர்ப்பாளர்.) அவள் அந்த அளவு மிக மோசமான நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்தாள். சிகாகோவிலுள்ள ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு பிரபலமான மருத்துவமனைகள் அவளுடைய பெயரை புத்தகத்தை விட்டு நீக்கி, “வர வேண்டாம்” என்று கூறியிருந்தன. அவளுடைய தாயார் அவளுக்குக் கொடுத்திருந்த ஒரு கோட் மாத்திரமே அவளிடம் மீதியாக இருந்தது, இப்படிப்பட்ட ஒரு மிகவும் கீழான நிலையில் இருந்தாள்; அவளுடைய மது பாட்டில்களை வைப்பதற்காக அந்த கோட்டை அவள் உள்ளாக வெட்டியிருந்தாள், அப்படிப்பட்ட ஒரு குடிகாரியாக அவள் இருந்தாள். அவள் மரணத்துக்கு பயப்படாமல், இரவு நேரத்தில் சாக்கடைகளில் படுத்திருப்பாள். அவள் புத்திசாலித்தனமான, கல்வியறிவு பெற்ற, பரிதாபமான அருவருப்பான கிழவி போன்ற தோற்றம் கொண்டவளான ஒரு வாலிப பெண்ணாக இருந்த அவள் (கூட்டத்திற்கு வந்து) பால்கனியில் உட்கார்ந்து கொண் டிருந்தாள். நாங்கள் அதோ அங்கே மேலே இந்தியானாவில் ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தோம், அவளுக்காக அக்கறை கொள்ள யாருமில்லை. அவள் யாரென்பதை அவர்கள் அறிவார்களானால், அவர்கள் அவளை விட்டு விலகி பின்னால் சென்று விடுவர். 66 109. ஆனால் இயேசு அக்கறை கொண்டார். அவர் என்னைச் சுற்றி அசைவாடி, “அதோ அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணின் பெயர் ரோஸல்லா கிரிஃபித் என்பதாகும். அவள் ஒரு குடிகாரி. குடிப்பழக்கத்தை மாற்றும் சங்கங்களினால் அவள் கைவிடப்பட்டிருக்கிறாள், அவர்களால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. எனவே எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. ஆனால் அவள் அவர் மேல் விசுவாசம் கொண்டிருக்கிறாள்: கர்த்தர் உரைக்கிறதாவது, இந்த மணி நேர முதற்கொண்டு இனிமேல் அவள் குடிகாரியல்ல” என்றார். இப்பொழுது அவள் ஒரு இனிமையான, அன்பார்ந்த ஒரு கிறிஸ்தவளாக இருக்கிறாள். அநேக இடங்களிலும், இரவு கேளிக்கை விடுதிகளிலும், சிறைச்சாலைகளிலும் குடிகாரர்களை இரட்சிக்கும்படி அவள் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறாள். 110. இயேசு அக்கறை கொள்கிறார், எனவே அப்படியே உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். உங்களுடைய துக்கங்களில், அவர் விசாரிக்கிறார். நீங்கள் உங்கள் அன்பார்ந்தவர்களை இழக்கும் போது, அவர் கவலை கொள்கிறார்; கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்காக அவர் அக்கறை கொள்கிறார்.